Friday, February 28, 2014

பருவநிலையை முப்பரிமாணத்தில் கண்காணிக்கும் செயற்கைக்கோள்: அமெரிக்கா-ஜப்பான் இணைந்து ஏவின

ஜப்பானின் தனேகஷிமா ஏவு தளத்திலிருந்து சீறிப்பாயும் எச்-2ஏ ராக்கெட் | படம்: ஏ.எப்.பி
மழை மற்றும் பனிப்பொழிவை முப்பரிமாண (3டி) தொழில்நுட்பத்தில் கண்காணிக்கும் செயற்கைக் கோளை ஜப்பான் ஏவியது. இச்செயற்கைக் கோள் அமெரிக்க உதவியுடன் உருவாக்கப்பட்டதாகும்.

ஆந்திரத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைஆந்திர மாநிலப் பிரிவினையை எதிர்த்து மாநில முதல்வர் என்.கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்ததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கைக்கு எதிர்ப்பு

கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி சார்பில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

Thursday, February 27, 2014

புதிய தனியார் வங்கி லைசென்ஸ்

புதிய தனியார் வங்கிகளுக்கான பரிந்துரையை ரிசர்வ் வங்கியிடம் அளித்தது ஜலான் தலைமையிலான குழு. நான்கு மணிநேர சந்திப்புக்கு பிறகு தன்னுடைய பரிந்துரையை செவ்வாய்க்கிழமை ரிசர்வ் வங்கியிடம் ஜலான் அளித்தார்.
இந்த பரிந்துரையில் புதிய தனியார் வங்கி தொடங்குவதற்கான தகுதி வாய்ந்த நிறுவனங்களின் பெயர் இருக்கிறது. ஆனால் எந்தெந்த நிறுவனங்களின் பட்டியல் இருக்கிறது என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

வியட்நாம் - அமெரிக்கா அணு ஒப்பந்தம்: அதிபர் பராக் ஒபாமா ஒப்புதல்

அமெரிக்கா – வியட்நாம் இடையிலான சிவில் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தார்.

'காமராஜர் துறைமுகம்' ஆனது எண்ணூர் துறைமுகம்

காமராஜர் துறைமுகம் விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன். | படம்: கே.வீ.ஸ்ரீனிவாசன்
எண்ணூர் துறைமுக நிறுவனத்துக்கு, காமராஜர் துறைமுக நிறுவனம் என பெயர் சூட்டப்பட்டது.
சென்னை - எண்ணூர் துறைமுகத்திற்கு, முன்னாள் முதல்வர் மறைந்த காமராஜர் பெயரை வைக்க, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

நாட்டின் முதல் அஞ்சல் துறை ஏடிஎம்

நாட்டிலேயே முதலாவது அஞ்சல் துறை தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரத்தை (ஏடிஎம்) சென்னையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.