மழை மற்றும் பனிப்பொழிவை முப்பரிமாண (3டி) தொழில்நுட்பத்தில் கண்காணிக்கும் செயற்கைக் கோளை ஜப்பான் ஏவியது. இச்செயற்கைக் கோள் அமெரிக்க உதவியுடன் உருவாக்கப்பட்டதாகும்.
ஆந்திர மாநிலப் பிரிவினையை எதிர்த்து மாநில முதல்வர் என்.கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்ததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதிய தனியார் வங்கிகளுக்கான பரிந்துரையை ரிசர்வ் வங்கியிடம் அளித்தது ஜலான் தலைமையிலான குழு. நான்கு மணிநேர சந்திப்புக்கு பிறகு தன்னுடைய பரிந்துரையை செவ்வாய்க்கிழமை ரிசர்வ் வங்கியிடம் ஜலான் அளித்தார்.
இந்த பரிந்துரையில் புதிய தனியார் வங்கி தொடங்குவதற்கான தகுதி வாய்ந்த நிறுவனங்களின் பெயர் இருக்கிறது. ஆனால் எந்தெந்த நிறுவனங்களின் பட்டியல் இருக்கிறது என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை.