Sunday, May 20, 2018

வடகிழக்குப் பிராந்தியத்தில் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்தவும், இந்தியாவுடன் அப்பிராந்தியத்தின் தொடர்பினை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் பல முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பார்சல் சரக்கு விரைவு ரயில் (Parcel Cargo Express Train) என்ற சரக்கு ரயிலை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரயில் தனது முதல் ஓட்டத்தை மே 17ஆம் தேதியன்று தொடங்கியது. அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரிலிருந்து புறப்பட்ட இந்த ரயில், மகாராஷ்டிர மாநிலத்தின் கல்யாண் நகரைச் சென்றடையும்.