Sunday, May 20, 2018

சென்னையில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டி தயாரிப்பு ஆலை சார்பாக ஆர்பிஎஃப் கவாத் மைதானத்தில் மே 17 முதல் 19 வரை மூன்று நாட்கள் ரயில்பெட்டி கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் உலகின் புகழ்பெற்ற ரயில் பெட்டி மற்றும் சாதனத் தொழிற்சாலைகள் தங்களது உற்பத்திப் பொருட்களையும், தொழில்நுட்பத்தையும் வைத்துள்ளன. 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட காட்சியாளர்கள் பங்கேற்று, இக்கண்காட்சியில் புதுமைப் படைப்பு மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தும் உற்பத்திப் பொருட்களை ரயில் பெட்டி உற்பத்தியாளர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்தியாவிலேயே முதன் முறையாக நடைபெறும் ரயில்பெட்டி கண்காட்சியை நேற்று (மே 17) ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார்.