Sunday, May 20, 2018

ரஸ்கின் பாண்ட்
இந்தியாவில் குழந்தைகள் இலக்கியத்தில் பங்காற்றியவர்களில் மிகவும் முக்கியமானவர் எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட். பிரிட்டிஷ் நாட்டின் வழி வந்தவரான ரஸ்கின், இதுவரை ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார். இவரது பிறந்த நாளான இன்று இவரைப் பற்றிய சில துணுக்குகள்:

1. இந்தியாவின் வில்லியம் வேர்ட்ஸ்வர்த் என்றழைக்கப்படுவது, ரஸ்கின் பாண்ட்தான்.

2. இவரது முதல் நாவலான The Room on the Roof வெளியானபோது இவரது வயது, 21.

3. Edith Clarke மற்றும் Aubrey Bond ஆகிய தம்பதியருக்குப் பிறந்த ரஸ்கின் பாண்ட், தனது நான்கு வயதில் பெற்றோரின் விவாகரத்தைக் காண்கிறார். அதன் பிறகு, இவருடைய அம்மா ஓர் இந்தியரை மணக்கிறார்.

4. 1950ஆம் ஆண்டு, 16 வயதில், ரஸ்கின் பாண்ட் தன் முதல் சிறுகதையான 'Untouchable'ஐ எழுதினார்.

5. சிறு வயதில் இவருக்கு ஒரு tap dancer ஆக வேண்டும் என்பது ஆசையாக இருந்திருக்கிறது.

6. சிறு வயதில் இவருக்கு மிகவும் பிடித்தமான கதைப் புத்தகம்: Ali in Wonderland: And Other Tall Tales.

7. மழை பெய்தால் இவர் மிகவும் சோம்பேறித்தனமாக உணர்வதுடன், முணுமுணுத்துக் கொண்டே இருப்பாராம்.

8. இவரது "Susana's seven husbands" என்ற நாவல் அடிப்படையில் எடுக்கப்பட்ட "7 khoon maaf” என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

9. 1992ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது; 1999ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது; 2014இல் பத்ம பூஷண் ஆகிய விருதுகளை இவருக்குக் கொடுத்து கவுரவித்திருக்கிறது இந்திய அரசு.