Tuesday, April 1, 2014

வாக்காளர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறை அறிமுகம்

தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது. 
மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில்
சோதனை அடிப்படையில் இந்த முறை அறிமுகம் செய்யப்படும் என்றும், இதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த சோதனை ஓட்டம் பலன் அளிக்கும்பட்சத்தில் எதிர்காலத்தில் அனைத்து தொகுதிகளிலும் ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறையை அறிமுகம் செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.