SHANMUGAM IAS ACADEMY

Sunday, May 20, 2018

எபோலோ வைரஸ் நோய் மீண்டும் காங்கோவில் வேகமாகப் பரவிவருவதையடுத்து, சோதனை முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் அந்நாட்டுக்கு அனுப்பிவைத்துள்ளது. காங்கோவின் வட மேற்கு நகரான பண்டகாவிலிருந்து 150 கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு கிராம பகுதியில் எபோலோ வைரஸ் நோய் இருப்பதை இந்த மாதத்தின் தொடக்கத்தில் காங்கோவின் சுகாதாரத் துறை அமைச்சர் இலுங்கா கலேங்கா உறுதி செய்தார். இதைத் தொடர்ந்து, எபோலா வைரஸ் அடுத்தடுத்து மக்களுக்கு வேகமாகப் பரவியது. சமீபத்தில் காங்கோவில் எபோலா நோயால் 42 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 23 பேர் உயிழந்துள்ளனர்.