SHANMUGAM IAS ACADEMY

Sunday, May 20, 2018

னது திரைப்படங்கள் வாயிலாக இந்தியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இணைப்பு பாலமாகச் செயல்பட்டதற்காக அமிதாப் பச்சனுக்கு கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பியாவுக்கான இந்திய தூதரக அலுவலகத்தில் ‘ஈரோப் டே 2018’ விழா அனுசரிக்கப்பட்டது. அந்த விழாவில் அமிதாப்புக்கு இந்தக் கௌரவ விருது வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டது. அமிதாப்பின் திரைப்படங்கள் அனைத்துமே ஐரோப்பியர்களை மிக நெருக்கமாகக் கவரும்படியும் இந்திய கலாச்சாரத்தை ஐரோப்பியர்கள் மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் இருப்பதால் அங்குள்ளவர்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன. எனவே அமிதாப்புக்கு இந்த விருதை வழங்குவதில் பெருமை கொள்வதாக ஐரோப்பிய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.