SHANMUGAM IAS ACADEMY

Tuesday, April 1, 2014

ஆண்டுக்கு 1 டாலர் சம்பளம் பெறும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கின் 2013 ஆண்டின் சம்பளம் வெறும் 1 டாலர் என்று தெரிகிறது.

நாசா நடத்திய போட்டியில் மதுரை பள்ளி மாணவிகளுக்கு பரிசு

நாசா அமெஸ் விண்வெளி வடிவமைப்பு போட்டியின் மூன்றாவது பரிசை வென்ற ஸ்ரீ சாரதா வித்தியாலய மகளிர் பள்ளி மாணவிகள். |படம்: வந்தனா. அறிவியல் சார் கதையை உருவாக்கிய மதுரையைச் சேர்ந்த ஸ்ரீ சாரதா வித்யாலயா மகளிர் பள்ளி மாணவிகளுக்கு, நாசா-வின் 2014 ஆம் ஆண்டுக்கான அமெஸ் விண்வெளி வடிவமைப்பு போட்டியின் இலக்கிய பிரிவில் மூன்றாவது பரிசு கிடைத்துள்ளது.

மியான்மரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்

மியான்மர் நாட்டில் கடந்த 30 வருடங்களுக்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவர்

குழந்தைகள் செல்போனில் பேச தடை

குழந்தைகள் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில், ஜப்பானிய நகரமான கரியாவில் இரவு 9 மணிக்கு மேல் அவர்கள் செல்போன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் நகருக்கு முதல் பெண் மேயர் தேர்வாகிறார்

பிரான்ஸில் பாரிஸ் மேயர் தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. பாரிஸ் நகரில் முதல் முறையாக பெண் மேயர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

வாக்காளர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறை அறிமுகம்

தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது. 
மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில்

Monday, March 31, 2014

செரீனாவுக்கு 7-வது பட்டம்

மியாமி மாஸ்டர்ஸ் மகளிர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் சீனாவின் லீ நாவை வீழ்த்திய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். மியாமி மாஸ்டர்ஸ் பட்டத்தை செரீனா வெல்வது இது 7-வது முறையாகும்.

சி.ஐ.ஐ.க்கு புதிய தலைவர் நியமனம்

இந்திய தொழிலக கூட்டமைப் பின் (சி.ஐ.ஐ.) புதிய தலை வராக அஜய் ஸ்ரீராம் நியமிக்கப் பட்டிருக்கிறார். இவர் டி.சி.எம்.ஸ்ரீராம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆவார். 2014-15-ம் ஆண்டுக்கான தலைவராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வெளிநாட்டுக்கடன் 42,600 கோடி டாலர்

வெளிநாடுகளிலிருந்து இந்தியா பெற்றுள்ள கடன் தொகை டிசம்பர் மாதம் 42,600 கோடி டாலராகும். இதில் அரசு பெற்றுள்ள கடன் தொகை மட்டும் 7,640 கோடியாகும் இது மொத்தக் கடன் தொகையில் 18 சதவீதமாகும். முந்தைய ஆண்டு டிசம்பரில் இது 8,170 கோடி டாலராக இருந்தது என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

68 இபிஎப் அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு

தொழிலாளர் சேமநல நிதி வாரியம் (இபிஎப்ஓ) 68 தனியார் பி.எப். அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு சலுகை அளித்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும்.

2 உணவு பதப்படுத்தல் பூங்கா

ஹைதராபாதில் நடைபெற்ற உணவு பதப்படுத்தும் தொழில் தொடர்பான கருத்தரங்கில் (இடமிருந்து) மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் சிராஜ் ஹூசைன், கூடுதல் செயலர் ஜெகதீஷ் மீனா மற்றும்(அசோசாம் தெற்கு மண்டல தலைவர் ரவிந்திர சன்னா ரெட்டி | படம்: பி.வி.சிவக்குமார்.ஆந்திர மாநிலத்தில் 2 பிரம்மாண்டமான உணவு பதப்படுத்தல் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கு கோதாவரி பகுதியிலும் மற்றொன்று நிஜாமாபாதிலும் அமைய உள்ளது.

பிலிப்பின்ஸில் முஸ்லிம் போராளிகள் அமைதி ஒப்பந்தம்

பிலிப்பின்ஸில் உள்ள மிகப்பெரிய முஸ்லிம் போராளிகள் குழுவுக்கும் அரசுக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது. இதன் மூலம் 40 ஆண்டு கால போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பெண் உரிமைக்காகப் போராடும் சவுதி அரேபிய பெண்ணுக்கு விருது

சவுதி அரேபியாவில் பெண்களின் உரிமைக்காகப் போராடும் மஹா அல் முனீப் என்ற பெண்ணுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விருது வழங்கி கவுரவித்தார்.

மக்களை கவர்ந்த நாட்டின் மூத்த வாக்காளர்

ஷியாம் சரண் நேகி நாட்டின் மூத்த வாக்காளர் என்று தேர்தல் ஆணையத்தால் கவுரவப்படுத்தப்பட்டுள்ள ஷியாம் சரண் நேகி (97), தோன்றும் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வீடியோ மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Wednesday, March 26, 2014

அரசு பங்கு விற்பனைக்கு கண்காணிப்புக் குழு: மத்திய நிதி அமைச்சகம் முடிவு

அரசு பங்கு விற்பனையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்காக ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை நியமிக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசு பங்கு விற்பனையைக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு பங்குகளை விற்பனை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் வங்கிகள் உள்ளிட்ட பிற அரசு நிறுவனங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களின் செயல்பாடுகளை புதிதாக நியமிக்கப்பட உள்ள ஓய்வு பெற்ற அதிகாரி கண்காணிப்பார்.

நீர் மேலாண்மை: இந்தியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு ஐ.நா. விருது

டோக்கியோவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நடைபெற்ற உலக தண்ணீர் தின விழாவில், 2014- ஆம் ஆண்டுக்கான 'வாழ்க்கைக்காக தண்ணீர் விருது' (Water for Life award) இந்தியா மற்றும சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.